21 April 2009

அந்திமாலைப் பொழுது...



அந்திமாலைப் பொழுது

அருக்கன் சிவக்க
அலைகடல் இசைக்க
கொண்டல் அசையும்
கோலம் பார்த்து
தெரியல் வேளை
இரு இதயம் இடம்மாறும்
மோகத்தில் உள்ளம்
முத்தத்தில் தடுமாறும்
நெய்தல் நிலமெங்கும்
தென்றல் மெல்ல வீச
கங்குல் தோன்றும்
ஆழி கொந்தழிக்க
வெண்மதியின் வரவில்
வெண்ணுரை தோன்றும்
இணைந்திருக்கும்
ஈருடல் கண்டு
வானத்து வஞ்சிக்கொடி
நாணத்தில்
உடல் வெளுறிப் போகும்

No comments: