20 April 2009

சின்ன சின்ன கீறல்கள்...

சின்ன சின்ன கீறல்கள்

சின்ன சின்ன
கீறல்கள் தான்
இதயத்தில்
வலிக்கின்றது
பெரிய பெரிய
காயங்கள்
ஏதும் இல்லை
வேதனை இல்லை
அப்பப்போ
இதயத்தை வருடும்
நெருடல்கள்
இதமாகத்தான்
எண்ணத்தை
கீறிச் செல்கிறது
கீறல்கள் தான்
வலிக்கின்றது
காயங்கள்
ஏதுமில்லை

புரிந்து கொண்டு
புரியாமல்
உளறும்
உதடுகளும்
தெரிந்து கொண்டும்
தெரியாமல்
பேசும்
வார்த்தைகளும்
உள்ளத்தை
தொட்டு குத்தி
செல்கின்றது
சின்னச் சின்ன
கீறல்கள் தான்
பெரிய பெரிய
காயங்கள்
ஏதுமில்லை
வலிக்கின்றது
இதமாகத்தான்

சொல்லி விட்ட
வார்த்தைக்காகவும்
செய்துவிட்ட
செயலுக்காகவும்
கொடுத்து கொண்ட
தண்டனைகளால்
சின்ன சின்ன
கீறல்கள் தான்
பெரிய பெரிய
காயங்கள்
ஏதுமில்லை
வலிக்கின்றது
இதமாகத்தான்

கண்ணோடு
கனவுகளும்
நெஞ்சோடு
நினைவுகளும்
உறங்கும் போது
விழித்துக் கொள்ளும்
இதயத்தை
நகங்களால்
இதமாக
வருடிவிடும்
சின்ன சின்ன
கீறல்கள் தான்
பெரிய பெரிய
காயங்கள்
ஏதுமில்லை
உண்மையாகத்தான்
வருடல்கள் போல்
நெருடல்களும்
இதமாய்த்தான்
இருக்கின்றது

No comments: