எனக்கென ஒருத்தி
எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ
எனக்கெனப் பிறந்த அவளை நான் இதுவரை காணவில்லை
நான் இதுவரை காணாதவளை நான் இன்னும் தேடுகின்றேன்
எனக்கெனப் பிறந்த அழகி அவள் எங்கே இருக்கிறாளோ
மான் விழியாளோ அவள் மரகத மொழியாளோ
மான் விழியாளோ அவள் மரகத மொழியாளோ
மெல்லிடையாளோ இல்லை மேனகை போன்றவளோ அவள்
மெல்லிடையாளோ ஒரு மேனகை போன்றவளோ
எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......
உன் அழகை காண்பதற்கு நான் நெற்றியில் ஓர் பொட்டு வைப்பேன்
நான் ஊரறிய உன் கழுத்தில் ஒரு மாலை ஏற்றிடுவேன் பூ மாலை ஏற்றிடுவேன்
விண்வெளியில் வீடு கட்டி நாம் வாழ்ந்து பார்ப்போமா
வெள்ளைப் புறா மீதில் ஏறி ஒரு ஊர்வலம் போவோமா
ப+விதழை விரித்து அதில் நாம் நித்திரையும் செய்வோமே
வானவில்லை எடுத்து அதை நாம் உடுத்தி திரிவோமே
எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......
மல்லிகையிற் ப+த்தொடுத்து நான் உன் தலையிற் சூட்டிடுவேன்
நான் உன் முகத்தை நிதம் பார்த்து என் வாழ்வில் மகிழ்ந்திடுவேன்
என் வாழ்வை வாழ்ந்திடுவேன்
வள்ளம் ஒன்றில் மிதந்து கடல் அலையைப் பிடிப்போமா
மின்னும் வெள்ளி எடுத்து அதில் ஒரு மாலை தொடுப்போமா
வெள்ளி மாலை போட்டு நாமும் இங்கு பாடித்திரிவோமே
அந்தி வான சூரியனை நாம் தொட்டுப் பார்ப்போமே
எனக்கென ஒருத்தி அவள் எங்கே இருக்கிறாளோ......
No comments:
Post a Comment