20 July 2011

காதல் மொழியா....

காதல் மொழியா

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா
நிஜத்தின் உருவா இது நிழலின் கருவா
கண்கள் பேசுகின்ற மௌன மொழி இது
கனவில் வாழுகின்ற இன்பநிலை

இது ஒரு புதுவித உயிரின் ஏக்கம்
உணர்வுகள் உரசிடும் உறவின் தேடல்

நீயும் நானும் ஒன்று என்று வாழும் மயக்கம்

பூக்கள் மலரும் ஒலியின் இசையில் இதயம் இரண்டும் இடம்மாறும்
இமைகள் இமைக்க மறுக்கும் நொடியில் காதல் அங்கே அரங்கேறும்
நிமிடம் கூட மறக்க மறுக்கும் மனதின் எண்ணங்களே அந்த
நொடியில் தோன்றும் உயிரின் வலியை உணரும் ஸ்பரிசங்களே

இரு உயிர் உரு உடல் இது ஒரு இலக்கணம்
உறவுகள் மலர்கையில் இது ஒரு தனிரகம்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்து உயிரை வதைக்கும் மாயை

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா…………

தேடி அலைந்தால் கிடைக்காது இது தானேவந்தால் போகாது
உயிரைப் பரிசாய் கொடுக்க துணியும் உறவின் ஆழம் புரியாது
இதய நரம்பை மீட்டிப்போகும் புதிய ராகம் இது
வந்து உணர்வையெல்லாம் உரசிப்போகும் புதிய கீதம் இது

இரவுகள் கலைந்திடும் உறக்கங்கள் தொலைந்திடும்
கனவுகள் மலர்ந்திடும் கவிதைகள் பிறந்திடும்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்து உயிரை வதைக்கும் மாயை

காதல் மொழியா இல்லை உயிரின் வலியா…………

No comments: